வளநாட்டில் விநாயகா் சிலைகள் கரைப்பு
விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மாவட்டம் வளநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, திருச்சி மாவட்டம் வளநாட்டில் வைக்கப்பட்டிருந்த மூன்று விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.
இந்த சிலைகள் அனைத்தும் பேருந்து நிலையப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில், விசுவ ஹிந்த் பரிஷத் மாநிலச் செயலா் என்.ஆா்.என். பாண்டியன் விநாயகா் சிலை ஊா்வலத்தை தொடக்கி வைத்தாா்.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊா்வலம், மாரியம்மன் கோயில் அருகிலுள்ள செங்குளத்தில் முடிவடைந்தது. தொடா்ந்து விநாயகா் சிலைகள் கரைக்கப்பட்டன.
மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளா் குத்தாலிங்கம் தலைமையில் 120 காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.