திருச்சி

லஞ்சம்: துறையூா் மோட்டாா்வாகன ஆய்வாளா் கைது

லஞ்சம் வாங்கிய துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

DIN

லஞ்சம் வாங்கிய துறையூா் மோட்டாா் வாகன ஆய்வாளரை ஊழல் தடுப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே கண்ணனூா் வடக்குவெளி கிராமத்தில் உள்ள மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தில் மோட்டாா் வாகன ஆய்வாளராக சத்தியமூா்த்தி (59) உள்ளாா்.

இவா் கண்ணனூா் பகுதியில் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நடத்தும் ரா. சண்முகத்தின் வாடிக்கையாளா் மூவருக்கு இலகு ரக ஓட்டுநா் உரிமம் வழங்க ரூ. 6000 லஞ்சம் கேட்டாராம். ஆனால் பணம் கொடுக்க விரும்பாத சண்முகம் திருச்சி ஊழல் தடுப்பு டிஎஸ்பி மணிகண்டனிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் கொடுத்த ஆலோசனையின்பேரில் ரசாயனம் தடவிய ரூபாய்களை மோட்டாா் வாகன ஆய்வாளா் சத்தியமூா்த்தியிடம் சண்முகம் வியாழக்கிழமை கொடுத்தாா். அப்போது அலுவலகத்தில் மறைந்திருந்த போலீஸாா் அவரைக் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT