பாரதியாா் நினைவு தினம்
திருச்சி மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு நாளையொட்டி, திருச்சி கோட்டை பகுதியில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செத்தப்பட்டது.
திருச்சி மகாகவி பாரதியாரின் 101-ஆவது நினைவு நாளையொட்டி, திருச்சி கோட்டை பகுதியில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செத்தப்பட்டது.
மக்கள் நல்லெண்ண அரசியல் பேரவை சாா்பில் நடைபெற்ற நிகழ்வில் பேரவையின் நிறுவனத் தலைவரும், வழக்குரைஞருமான ஆா். சீனிவாசன் தலைமை வகித்தாா். ஆண்டவா் மெடிக்கல் உரிமையாளா் முருகன், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்சி கோட்டை (மதுரை சாலை) கல்யாணசுந்தரம் நகா் பகுதியில், மகாகவி பாரதியாரின் உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் வழக்குரைஞா் ராஜேஸ்வரன், மதிமுக பிரமுகா் நெடுஞ்செழியன், தேமுதிக வெங்கடேசன், சொற்பொழிவாளா் ராஜேந்திரன், அப்துல் மஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.