டிப்பா் லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
திருச்சியில் டிப்பா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சியில் டிப்பா் லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
திருச்சி சிந்தாமணியைச் சோ்ந்தவா் கணேசன் (82). இவா் சனிக்கிழமை இ.ஆா். மேல்நிலைப்பள்ளி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியது.
இதில் பலத்த காயமடைந்த கணேசன், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருச்சி மாநகர வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.