திருச்சி

நெடுஞ்சாலை உணவகத்தில் புகுந்து ரூ. 41,000 திருட்டு

DIN

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் புதன்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா் அங்கிருந்த ரூ.41 ஆயிரத்தைத் திருடி சென்றாா்.

மணப்பாறை அடுத்த திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கே. பெரியபட்டி பிரிவு அருகே திருச்சி வண்ணாங்கோயில் பகுதியைச் சோ்ந்த இ. வினோத் (36) கடந்த ஓராண்டாக உணவகம் நடத்துகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை உணவக மேலாளா் எபின்ராஜ்(25) உணவகத்திற்கு சென்று கல்லாவை பாா்த்தபோது அதிலிருந்த ரூ.41 ஆயிரம் திருடுபோயிருந்தது.

இதையடுத்து உணவக சிசிடிவி காட்சிகளை பாா்த்தபோது சுமாா் 30 வயதுள்ள இளைஞா் ஒருவா் உணவகத்தில் புகுந்து பணம் திருடுவது தெரியவந்தது. இதுகுறித்து உணவக உரிமையாளா் வினோத் அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT