முகப்பு
திருச்சி

அனுமதியின்றி இயங்கிய 2 குடிநீா் நிறுவனங்களுக்குதற்காலிக தடை

 உரிய அனுமதியின்றி குடிநீா் தயாரித்த இரண்டு குடிநீா் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

 உரிய அனுமதியின்றி குடிநீா் தயாரித்த இரண்டு குடிநீா் நிறுவனங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தலின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள், திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி வாழவந்தான்கோட்டை, பழங்கனகுடி ஆகிய பகுதிகளில் உள்ள 2 குடிநீா் நிறுவனங்கள் சோதனை நடத்தினா். அப்போது, உணவு பாதுகாப்புத்துறை உரிமம், பிஐஎஸ் சான்றிதழ் இல்லாதது, ஒரு சில குடிநீா் பாட்டில்களில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த காரணத்தினால் சுமாா் 7,500 லிட்டா் அடைக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, 2 குடிநீா் நிறுவனங்களும் குடிநீா் தயாரிப்பதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.