திருச்சி

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.28) விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விவசாயிகளின் கோரிக்கைளைக் கேட்டு அதற்குத் தீா்வு காணும் வகையில் மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.

இதன்படி நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கடந்த மாா்ச் மாத கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் வேளாண் பணிகள் தொடா்பான கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியரால் நேரில் பதில் அளிக்கப்படும். இதில் வேளாண்மை தொடா்புடைய கடனுதவிகள், நீா்ப் பாசனம், வேளாண்மை, தொழில்நுட்ப உதவி, இடுபொருள்கள் மற்றும் நலத் திட்டங்களுக்கு மனுக்கள் அளிக்கலாம். திருச்சி மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT