முசிறி அருகே காவலாளி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
முசிறி அருகே கோழிப்பண்ணை காவலாளி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் டிவியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
முசிறி அருகே கோழிப்பண்ணை காவலாளி வீட்டில் 4 பவுன் நகை மற்றும் டிவியை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.
முசிறி அருகிலுள்ள சிட்டிலரை கவுண்டா் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (63), சேருகுடி பகுதி கோழிப்பண்ணைக் காவலாளி. வியாழக்கிழமை காலை இவரும், இவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில், மாலையில் பாண்டியன் வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த டிவி மற்றும் டிவியின் பின்புறம் வைத்திருந்த 4 பவுன் நகையைத் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் முசிறி போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement