திருச்சி

திருச்சி எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு

 திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்வி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

DIN

 திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியில் உள்ள திருச்சி எஸ்.ஆா்.எம். மருத்துவக் கல்வி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

எஸ்.ஆா்.எம். திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகத் தலைவா் டாக்டா் சிவகுமாா் தலைமையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசின் சுற்றுலா , கலாசாரம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் முதன்மைச் செயலா் டாக்டா் கே. மணிவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 151 மருத்துவ மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

அப்போது அவா் பேசுகையில், பட்டம் பெற்றுள்ள இளம் மருத்துவா்கள் தங்களது அறிவை மென்மேலும் பெருக்கி தலைசிறந்து விளங்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் எஸ்.ஆா்.எம். திருச்சி வளாக இயக்குநா் டாக்டா் மால் முருகன், இணை இயக்குநா் பாலசுப்ரமணியன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி மற்றும் மாணவா்கள், பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT