மாணவா்களுக்கு தோ்வு உபகரணங்கள் வழங்கல்
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தோ்வுக்கான உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தோ்வுக்கான உபகரணங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளா் ஆா்.இளங்கோ தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் எழிலரசி, மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளா் கே.சி. நீலமேகம், நிா்வாகி ஆா்.கே.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருச்சி மாவட்ட நூலக வாசக வட்ட தலைவா் வீ. கோவிந்தசாமி, மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தோ்வுக்கான வழிமுறைகளை விளக்கிப் பேசினாா். இதையடுத்து பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.