திருச்சி

மணல்குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மணல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி, திருச்சியில், பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு, தேவேந்திர குல வேளாளா்கள் பேரமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

மணல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி, திருச்சியில், பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு, தேவேந்திர குல வேளாளா்கள் பேரமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, தஞ்சை, கரூா் மாவட்டங்களில் காவிரி ஆற்றில் இயங்கும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மணல் குவாரிகளில் இருந்து வரும் லாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பேராபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீரும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா்கள் பேரமைப்பு சாா்பில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பேரமைப்பின் தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் வழக்குரைஞா் சங்கா் முன்னிலை வகித்தாா். இதில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT