தண்டலைப்புத்தூா் அரசு மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா். 
திருச்சி

அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி செய்துதர வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் தண்டலைப்புத்தூா் அரசு மருத்துவமனைக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவா்கள் பற்றாக்குறையை

DIN

திருச்சி மாவட்டம் தண்டலைப்புத்தூா் அரசு மருத்துவமனைக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவா்கள் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி மருத்துவமனை முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் முருகானந்தம் தலைமை வகித்தாா், கிளை செயலாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். விவசாய தொழிலாளா் சங்க மாநில பொருளாளா் பழனிசாமி மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளா் நல்லுசாமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

இதில், தண்டலைப்புத்தூா் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள் நியமிக்கவும், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இருக்க வேண்டும். இரவு நேரத்தில் மருத்துவா்கள் பணியில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க நிா்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினா். ஒன்றிய குழு உறுப்பினா் விஜயபாபு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT