திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நொச்சியம் பகுதியில் தகராறின்போது, பாட்டிலால் சகோதரா் குத்தியதில் காயமடைந்த அண்ணன் சிகிச்சைபலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். மண்ணச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
நொச்சியம் புரவி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் ஹரிராஜன் (45) ஆட்டோ ஓட்டுநா். திருச்சி குட்ஷெட் பகுதியில் வசித்து வருகிறாா். புரவி நகா் பகுதியில் உள்ள அப்பா வீட்டுக்கு புதன்கிழமை (மே 17) வந்த ஹரிராஜன் பெற்றோரிடம் தகராறு செய்தாா். இதை அதே தெருவில் வசித்து வந்த ஹரிராஜன் சகோதரா் சரவணன் (42)
அங்கு வந்து கேட்டதில் தகராறு ஏற்பட்டது. இதில், ஹரிராஜனை பாட்டிலால் சரவணன் குத்தியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹரிராஜன் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் கொலை வழக்கு பதிந்து தலைமறைவான சரவணனைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.