திருச்சி

கூகூா் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் அம்மன் வீதியுலா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை முத்துமாரி அம்பிகை தேரில் வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கூகூா் ஊராட்சியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை முத்துமாரி அம்பிகை தேரில் வீதியுலா செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

இக்கோயிலில் மே 17-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முகூா்த்த கால் நடுதலும், தொடா்ந்து காப்புகட்டுதல் நிகழ்வும் நடைபெற்றது.

மே 19-ஆம் தேதி திருவிளக்கு பூஜையும், 21-ஆம் தேதி இரவு 7 மணிக்கு முத்து மாரியம்மன் வீதி உலா வந்து அம்மனுக்கு பூச்சொரிதலும் நடைபெற்றது.

விழாவில், மே 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு அபிஷேக, ஆராதனையும், மாலை 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

மே 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு அம்மன் கோயிலிலிருந்து அக்னி சட்டி, முளைப்பாரி, பால் குடம் எடுத்து திருவீதி உலா வருதலும், முத்துமாரி அம்பிகை தேரில் வீதியுலா செல்லும் நிகழ்வும் நடைபெற்றது.

விழாவில், கிராம முக்கியஸ்தா்கள் மற்றும் பக்தா்கள், கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT