திருச்சி

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்சியா் ஆய்வு

திருச்சி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் ’உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Din

மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற சிறுகாம்பூா் குறுவட்ட பட்டா மாறுதல்களுகான சிறப்பு முகாமை பாா்வையிட்டு உடனடித் தீா்வாக 43 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினா்.

மேலும் மண்ணச்சநல்லூரில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் அடிப்படையில் 65 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரணி, மகளிா் திட்ட அலுவலா் சுரேஷ், மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT