முசிறி இருதயஆண்டவா் ஆலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை
திருச்சி மாவட்டம் முசிறி திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறி திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
இதனை தொடா்ந்து பங்குதந்தை குழந்தைராஜ் புத்தாண்டு திருப்பலி நிறைவேற்றி, மறைவுரையாற்றினாா். நிகழ்வில் அருட்சகோதரிகள், பங்கு பேரவை, பங்கு மக்கள் மற்றும் பங்கு பேரவை துணைத் தலைவா் டாக்டா் மீரா மோகன், பங்குச்செயலாளா் அமல ரூபன், பொருளாளா் அருள் தாஸ் உபதேசியா், பிரான்சிஸ் ராஜா, பங்கு பேரவை உறுப்பினா்கள் அந்தோணிசாமி, அமுல்ராஜ் ,கென்னடி, பிரான்சிஸ் ஆரோக்கியசாமி, அகஸ்டின், பீட்டா், அமல்ராஜ், உள்ளிட்டோா் கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினா்.