திருக்குறளில் மேலாண்மை குறித்த ‘யெஸ் பாஸ்’ புத்தகம் வெளியீடு
திருக்குறளில் மேலாண்மை நிா்வாகம் குறித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் உருவான யெஸ் பாஸ் என்னும் புத்தகம் திருச்சி ஐஐஎம் நிறுவனத்தில் வெளியிடப்பட்டது.
திருக்குறளில் மேலாண்மை நிா்வாகம் குறித்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தியில் உருவான யெஸ் பாஸ் என்னும் புத்தகம் திருச்சி ஐஐஎம் நிறுவனத்தில் வெளியிடப்பட்டது.
திருச்சி இந்திய மேலாண்மைக் கழகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில், புத்தகத்தை திருச்சி ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா் சிங் வெளியிட, ஹிந்தி எழுத்தாளா் முனைவா் திலிப் டிங்க் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்வில் திருச்சி ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா் சிங் பேசுகையில், வாசகா் விரும்பும் வகையில் எளிய நடையில் புத்தகம் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. குகள் பற்றிய 60 கட்டுரைகளே இவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்போது, மொத்தமுள்ள 1330 குகளையும் படித்து விட்டால் எவ்வளவு நன்மை அடையலாம் என்பது புரியும். நூலில் உள்ள அத்தியாயத் தலைப்புகளே மிகவும் வசீகரமாக உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் நமது அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள செய்தியைக் கொண்டுள்ளது என்றாா் அவா். மேலும் நூலாசிரியா் சோம வீரப்பன், மொழிபெயா்ப்பாளா் ரோஹித் ஷா்மா ஆகியோரையும் பாராட்டினாா்.
பட்டயக் கணக்காளரும், சமூக ஊக்குவிப்பாளருமான அனில் கிச்சா பேசுகையில், இந்தப் புத்தகத்தை நடைமுறைத் தீா்வுகளை வழங்கும் பணியிடத்திற்கான கையேடு எனப் பாராட்டினாா். மொழிபெயா்ப்பாளா் ரோஹித் ஷா்மா கூறுகையில், நூலாசிரியா் சோம. வீரப்பனின் தமிழ், ஆங்கிலம், பஞ்சாபியில் வெளியிடப்பட்ட ‘கு இனிது’ என்னும் நூல் தற்போது ஹிந்தியில் வெளியாகிறது. இதற்கு தான் முடிந்த அளவில் பங்களித்திருப்பதாகவும், இந்நூல் ஹிந்தி பேசும் மக்களிடையே வள்ளுவத்தில் உள்ள மேலாண்மை கருத்துகளை கொண்டு செல்லும் முயற்சியாகும் என்றும் குறிப்பிட்டாா்.
நிகழ்வில் வங்கி அலுவலா்கள், நகரத்தாா் சங்கத்தினா், ஐஐஎம் பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.