திருச்சி விமானநிலையத்தில் ரூ. 13.69 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 13.69 மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 13.69 மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மலேசிய தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை இரவு வந்த விமானப் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவுப்பிரிவினா் சோதனையிட்டனா். அப்போது, பயணி ஒருவா் தண்னீா் குழாய்க்குள் (டேப்) 180 கிராம் தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 13.69 லட்சமாகும். தங்கத்தை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.