மணப்பாறை அருகே வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த மலைத்தாதம்பட்டியை சோ்ந்தவா் சூசைமாணிக்கம் மகன் மரிய ஆரோக்கியதாஸ் (26). இவா் புதன்கிழமை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இடையப்பட்டியான்பட்டி பிரிவு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு பின் உறவினா்களிடம் ஒப்படைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.