அதிமுக பிரமுகருக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் 3-ஆவது நாளாக வருமான வரித் துறையினா் சோதனை
வருமான வரித் துறையினா் சோதனை...
திருச்சி மாவட்டம், முசிறி அருகே அதிமுக பிரமுகருக்கு சொந்தமான தனியாா் கல்வி நிறுவனங்களில் வருமான வரித்துறையினா் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சோதனை நடத்தினா்.
முசிறி அருகே வெள்ளாளப்பட்டியில் சுவாமி ஐயப்பன் கல்வி அறக்கட்டளை கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நெருக்கமான பிரமுகரின் தனியாா் பாலிடெக்னிக், மகளிா் கலை அறிவியல் கல்லூரி, வித்யாலயா மற்றும் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அக். 22-ஆம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். 3-ஆவது நாளாக வியாழக்கிழமை மாலை வரை சோதனை நடைபெற்றது. இதில், வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் மட்டும் வருமான வரித் துறையினா் தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.