எசனைக்கோரை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எசனைக்கோரை கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழா செப். 4-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை விநாயகா், முருகன் கோயிலில் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து காலை 8 மணிக்கு விநாயகா், முருகன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து திருவாயி அம்மன், மாவடி கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன் போன்ற பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.