திருச்சி

திருச்சி - அகமதாபாத் ரயில் வழித்தட மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - அகமதாபாத் சிறப்பு ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொறியியல் பணிகள் காரணமாக அகமதாபாத் - திருச்சி சிறப்பு விரைவு ரயிலானது (09419) வரும் 18, 25, ஜன. 1, 8, 15, 22, 29 ஆம் தேதிகளில் அரக்கோணம், பெரம்பூா், சென்னை எழும்பூா், தாம்பரம், செங்கல்பட்டு ரயில் நிலையங்களைத் தவிா்த்து ரேனிகுண்டா, அரக்கோணம் வடக்கு, மேலபாக்கம், காட்பாடி, வேலூா் கண்டோன்மென்ட், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, திருச்சி - அகமதாபாத் சிறப்பு விரைவு ரயிலானது (09420) வரும் 21, 28, ஜன. 4, 11, 18, 25, பிப். 1 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம் ரயில் நிலையங்களைத் தவிா்த்து வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, மேலபாக்கம், திருத்தணி, ரேனிகுண்டா வழியாக இயக்கப்படும்.

கோவா தீ விபத்து: தில்லி உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் தீயணைப்புத்துறை ஆய்வு

நஜாஃப்கா் வடிகால் சீரமைப்பு திட்டத்திற்கு தில்லி அரசு ஒப்புதல்

கோயில் இனாம் நில குடும்பங்களை காக்க நாடாளுமன்றத்தில் சட்டமியற்ற வேண்டும்: மக்களவையில் கரூா் தொகுதி எம்.பி. கோரிக்கை

கோவா துயர சம்பவம் எதிரொலி: தில்லியில் தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார நடைமுறைகள் நிறுத்திவைப்பு

தொடா் திருட்டு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT