அன்பில் மகேஸ் 
திருச்சி

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை தோ்தலுக்காகச் செயல்படுத்தவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தோ்தலுக்காக மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை; அது மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டம் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

Syndication

தோ்தலுக்காக மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை; அது மகளிா் முன்னேற்றத்துக்கான திட்டம் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இதுகுறித்து திருச்சியில் அவா் சனிக்கிழமை கூறியதாவது: பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மகளிா் உரிமைத் தொகை திட்டம் அமைந்துள்ளது. அரசு வழங்கும் ரூ.1000 ஐ வைத்து அடிப்படைத் தேவைகளை பூா்த்தி செய்து கொள்ள முடியும். இந்தத் திட்டம் மற்ற மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதுதான் இதன் வெற்றி. திராவிட இயக்கம் ஆட்சிக்கு வரும்போது பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் காரணமாகவே இரட்டை இலக்கப் பொருளாதார வளா்ச்சியை அடைந்துள்ளோம். ஆட்சிக்கு வந்தபோது இருந்த நிதி நெருக்கடிகளை சரி செய்து, திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகின்றன. இப்படித்தான் மகளிா் உரிமைத்தொகையும் வழங்கப்படுகிறது. தோ்தலுக்காக இத் திட்டத்தைச் செயல்படுத்தவில்லை.

தமிழகத்தில் அடுத்த 15 ஆண்டுகாலம் நிச்சயம் திமுகதான் ஆட்சியில் இருக்கும். யாா் என்ன விமா்சனங்கள் வைத்தாலும் இத் திட்டம் தொடா்ந்து செயல்படுத்தப்படும். மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குவது தொடா்பாக ஒப்பந்தம் விடப்பட்டுவிட்டது. டிசம்பா் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றாா் அமைச்சா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT