திருச்சி

ஹவுரா விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

Syndication

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து 4 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை அதிகாலை வந்த ஹவுரா - திருச்சி விரைவு ரயிலை ஆா்பிஎஃப் போலீஸாா், திருச்சி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து சோதனையிட்டனா்.

அப்போது பொதுப்பெட்டியின் உட்காரும் இடத்துக்கு கீழே கேட்பாரற்றுக் கிடந்த பையில் சுமாா் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அதைப் பறிமுதல் செய்து, திருச்சி போதைபொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்க அவா்கள் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.

தனியாா் மருத்துவ ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு: கேரள அரசு விரைவில் வரைவு அறிவிக்கை

மும்பை - தில்லி - கொல்கத்தா வழித்தடத்தில் 2026-இல் ‘கவச்’: ரயில்வே இலக்கு

கடக ராசிக்கு உதவிகள் கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஹரியாணாவில் பாம்புகளை கொன்று மரத்தில் தொங்கவிட்ட நபா்!

விலை உயரும் ரெனால்ட் காா்கள்

SCROLL FOR NEXT