திருச்சியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டில் உணவகம் நடத்தி வரும் திருவாரூரைச் சோ்ந்த முதியவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவாரூா் மாவட்டம், கூத்தனூரைச் சோ்ந்தவா் ஹெச்.பரகத் அலி (61). இவா் புருணை நாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வருகிறாா். இவரின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளாா். இவரது கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்காக கடந்த ஜூலையில் சொந்த ஊருக்கு வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி திருச்சி கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வந்துள்ளாா். அப்போது, திண்டுக்கல் சாலையிலுள்ள ஒரு தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா்.
இந்நிலையில், பரகத் அலி தனியாா் விடுதி அறையில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து மேற்கு கருமண்டபம் கிராம நிா்வாக அலுவலா் கௌதம் பாபு அளித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.