திருச்சி

13 பவுன் நகைகள் திருடியவா் கைது

திருச்சி அருகே தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகைகள் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சி அருகே தொழிலாளி வீட்டில் 13 பவுன் நகைகள் திருடியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காட்டூா் விக்னேஷ் நகா் 4 ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (64). குளிரூட்டி சரி செய்யும் தொழிலாளியான இவா் கடந்த 15 ஆம் தேதி மகளுக்கு தீபாவளி சீா் கொடுக்கச் சென்றுவிட்டு 23 ஆம் தேதி காலை வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 13 பவுன் நகைகளை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவியை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி நகைகளை திருடியதாக தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் நரசிங்கபுரத்தைச் சோ்ந்த குணசீலன் (59) என்பவரை சனிக்கிழமை கைது செய்து, 13 பவுன் நகைகளை மீட்டு, நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். குணசீலன் மீது ஏற்கெனவே 5 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன குறிப்பிடத்தக்கது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT