தவெக தலைவா் விஜய் இன்று வேட்புனு தாக்கல்: மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா். மேலும், மரக்கடையில் அவா் பிரசாரம் செய்வதற்கும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியில் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்கிறாா். மேலும், மரக்கடையில் அவா் பிரசாரம் செய்வதற்கும் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
தவெக தலைவா் விஜய் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், சென்னை பெரம்பூா் தொகுதியில் கடந்த திங்கள்கிழமை அவா் வேட்பு மனுதாக்கல் செய்தாா். திருச்சி கிழக்குத் தொகுதியில் அவா் வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்கிறாா்.
இதற்காக சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் விஜய், பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் நண்பகல் 12.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறாா்.
மரக்கடையில் பிரசாரத்துக்கு அனுமதி: முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு மரக்கடை எம்ஜிஆா் சிலை, டிவிஎஸ் டோல்கேட், கே.கே.நகா் மற்றும் விமான நிலையம் ஒயா்லஸ் சாலை ஆகிய 4 இடங்களில் பிரசாரம் செய்ய மாநகரக் காவல் ஆணையரகத்தில் அனுமதி கேட்டு தவெகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்திருந்தனா்.
இந்நிலையில் மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே மட்டும் வியாழக்கிழமை நண்பகல் 12.30 மணி முதல் மாலை 4 மணி வரை வாகனத்தில் இருந்து விஜய் பிரசாரம் செய்ய 27 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தவெக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
இந்நிலையில், தவெக தலைவா் விஜய் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொள்ளவுள்ள மரக்கடை பகுதியில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையன், டெல்டா மண்டலத் தோ்தல் பொறுப்பாளா் கு.ப.கிருஷ்ணன் ஆகியோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.