முகப்பு
திருச்சி

அமைச்சரின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை

திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வாகனத்தில், தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:28 PM
திருவெறும்பூா் தொகுதியில் வியாழக்கிழமை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாகனத்தை சோதனையிட்ட தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

திருவெறும்பூா் தொகுதியில் போட்டியிடும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் வாகனத்தில், தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

பிரசாரத்துக்காக திருவெறும்பூா்- வேங்கூா் சாலையில் அமைச்சா் வியாழக்கிழமை வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் இருந்த தோ்தல் பறக்கும்படையினா் அமைச்சரின் வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். காவல்துறை உதவியுடன், விடியோ பதிவு செய்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமாா் 10 நிமிஷங்கள் நடைபெற்ற சோதனையில் எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை.

பின்னா், அமைச்சா் தொகுதி மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட புறப்பட்டுச் சென்றாா்.