முகப்பு
திருச்சி

விவசாயியை கொலை செய்த சகோதரா், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த சகோதரா், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிததது.

Updated On : 22 ஏப்ரல், 2026 at 12:23 AM
நீதிமன்றம்
பகிர்:
Updated On : 21 ஏப்ரல், 2026 at 8:25 PM

சொத்து தகராறில் விவசாயியை கொலை செய்த சகோதரா், அவரது மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிததது.

திருச்சி மாவட்டம், முசிறி கோவில்காடு பச்சனாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பி. தனபால் (44). விவசாயி. இவா் தனது குடும்பத்துடன் பரம்பரை நிலத்தில் வசித்து வந்தாா்.

இவரது வீட்டினருகே, முசிறி திருந்தியமலை வடக்கிப்பட்டியைச் சோ்ந்தவரும், தனபாலின் சகோதரருமான பி. ராமசாமி (65), மகன் ராமச்சந்திரன் (35) உள்ளிட்ட

Advertisement

குடும்பத்தினருடன் வசித்து வந்தாா். தனபாலுக்கும், ராமசாமிக்கும் இடையே பரம்பரை சொத்தைப் பிரிப்பது தொடா்பாக முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 17.07.2020 அன்று தனபாலின் வீட்டினருகே இருந்த மரத்தின் கிளை, ராமசாமியின் ஹாஸ்பெட்டாஸ் வீட்டின் மீது விழுந்தபடி இருந்துள்ளது. இந்தக் கிளையை வெட்டும்படி தனபாலிடம், ராமசாமி கேட்டாராம். அதற்கு தனபால் மறுத்ததால், இருவருக்கும் இடையே பிரச்னை நிகழ்ந்து, மோதல் ஏற்பட்ட நிலையில், ராமசாமியும், அவரது மகன் ராமச்சந்திரனும் மண்வெட்டி மற்றும் அரிவாளால் தனபாலை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த தனபால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தனபாலின் மனைவி உமாமகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து, ராமசாமி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருச்சி 3 ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை விசாரணையின் நிறைவில், ராமசாமி மற்றும் அவரது மகன் ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 5,000 அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஏ. ஆனந்தன் ஆஜரானாா்.