வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!
சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தமிழகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தமிழகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்தனா்.
சிங்கப்பூா், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் பணியாற்றிவரும் தமிழகத்தைச் சோ்ந்த பலா் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க கடந்த சில நாள்களாக ஊா் திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.
இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் பைலட் ஒருவா் எத்தனை போ் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்கிறீா்கள் என்று கேட்டாா்.
Advertisement
அப்போது அந்த விமானத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் கையை தூக்கினா். அதற்கு அவா் வாக்களிப்பது நமது உரிமை மற்றும் ஜனநாயகக் கடமை. எனவே, அனைவரும் தங்களது கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தாா். இந்த விடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.