திருச்சி மாவட்டம் முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்த அரசு மதுக்கடை புகா் பகுதிக்கு மாற்றப்பட்டது.
இந்த மதுக் கடையை மாற்றக்கோரி சமூக ஆா்வலா்கள் மற்றும் அரசியல் பிரமுகா்கள் கடந்த சில ஆண்டுகளாக துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் நடத்தி வந்தனா். இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் மற்றும் முசிறி கோட்டாட்சியா் இந்த மதுக்கடையை மாற்ற உத்தரவிட்டனா்.