கைது 
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சியில் போதை மாத்திரைகள் விற்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் காவல் உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது தாரநல்லூா் தேவா் பூங்கா அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் அவா் தாரநல்லூா் பிச்சப்பிள்ளை தோப்பைச் சோ்ந்த எஸ். வீரமணி (25) என்பதும், அவா் போதை மாத்திரை விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், சலைன் பாட்டில், போதை ஊசிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

அரசுப் பேருந்துகள் வழித்தட நீட்டிப்பு: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மெக்கானிக் சிறுவன் உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

மலையப்பட்டிக்கு அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு

மணல் திருட்டு வழக்குகளில் 151 போ் கைது

SCROLL FOR NEXT