முகப்பு
வேலூர்

அவல நிலையில் அரசுக் கல்லூரி

குடியாத்தம், அக். 11: குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்  காலியாக உள்ள 33 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மூடப்பட்டுள்ள நூலகத்தைத் திறக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:53 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:21 PM

குடியாத்தம், அக். 11: குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்  காலியாக உள்ள 33 பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மூடப்பட்டுள்ள நூலகத்தைத் திறக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 1964-ல் திருமகள் கல்விச் செல்வம் எனும் அமைப்பு நன்கொடையாக வழங்கிய ரூ5 லட்சத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டதால், திருமகள் ஆலைக் கல்லூரி என்றே அழைக்கப்படுகிறது. தற்போது இக்கல்லூரி காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.20 மணி வரையில் முதல் சுழற்சியாகவும், பிற்பகல் 1.20 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை 2 வது சுழற்சியாகவும் இயங்கி வருகிறது. இங்கு 1,993 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

 இக்கல்லூரியில் பி.ஏ (பொருளாதாரம்), பி.எஸ்.சி (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவர தொழில் நுட்பவியல்), பி.காம், எம்.எஸ்.சி (கணிதம்), எம்.சி.ஏ ஆகிய பாடப் பிரிவுகள் போதிக்கப்படுகின்றன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.