12-ல் பூனைத்தாங்கலில் மனுநீதி நாள் முகாம்
செய்யாறு, ஜன. 8: செய்யாறு வட்டம் பூனைத்தாங்கல் கிராமத்தில் வரும் புதன்கிழமை (ஜன. 12) காலை மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது. செய்யாறு வட்டம் உள்வட்டத்தைச் சேர்ந்த சுருட்டல் வடகல்பாக்கம், சேனியநல்லூர் ஆ
செய்யாறு, ஜன. 8: செய்யாறு வட்டம் பூனைத்தாங்கல் கிராமத்தில் வரும் புதன்கிழமை (ஜன. 12) காலை மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது.
செய்யாறு வட்டம் உள்வட்டத்தைச் சேர்ந்த சுருட்டல் வடகல்பாக்கம், சேனியநல்லூர் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பூனைத்தாங்கல் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் திருவண்ணாமலை மாவட்ட விநியோக அலுவலர் தரணிபதி தலைமையில் நடைபெறுகிறது. இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர். முகாம் ஏற்பாடுகளை செய்யாறு வட்டாட்சியர் அ.லலிதா, தூசி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம அலுவலர்கள் செய்துள்ளனர்.