பூட்டிய வீட்டில் திருட்டு
குடியாத்தம், ஜன. 8: குடியாத்தம் பிச்சனூர் ராஜக்கல் குள்ளப்ப தெருவைச் சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் செல்வராஜின் (65) வீட்டின் பீரோவை உடைத்து, அரை சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி நகைகள், சில்லறை நாணயம் ர
குடியாத்தம், ஜன. 8: குடியாத்தம் பிச்சனூர் ராஜக்கல் குள்ளப்ப தெருவைச் சேர்ந்த பெட்டிக் கடைக்காரர் செல்வராஜின் (65) வீட்டின் பீரோவை உடைத்து, அரை சவரன் தங்க நகை, கால் கிலோ வெள்ளி நகைகள், சில்லறை நாணயம் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றவர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள தன் மகன் யோகராஜ் வீட்டில் நடந்த ஐயப்ப சுவாமி பூஜைக்குச் சென்றபோது, திருடு போனதாக செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் நகர போலீஸôர் வழக்குப் பதிந்துள்ளனர்.