வடமாநிலத்தவர் வேலூர் வர வரப்பிரசாதமாகும் "விவேக் எக்ஸ்பிரஸ்'
அரக்கோணம், நவ. 20: நாட்டிலேயே அதிக தூரம் செல்லும் ரயிலான திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காட்பாடி வழியாக செல்லவுள்ளது. இந்த ரயில் வேலூர் மாவட்டத்துக்கு வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு
அரக்கோணம், நவ. 20: நாட்டிலேயே அதிக தூரம் செல்லும் ரயிலான திப்ருகர்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காட்பாடி வழியாக செல்லவுள்ளது. இந்த ரயில் வேலூர் மாவட்டத்துக்கு வரும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த ரயில்தான் உலகிலேயே 8ஆவது அதிக தூரம் செல்லும் ரயிலாகும்.
நாட்டிலேயே அதிக தூரத்துக்கு (4,286 கி.மீ. தூரம்) கடந்து செல்லும் வகையில், புதிய ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் இந்த ரயில் அறிமுக ஓட்டமாய் கடந்த 19ஆம் தேதி (சனிக்கிழமை) திப்ருகரில் தொடங்கி வைக்கப்பட்டது.