மகாபாரத சொற்பொழிவு: துரியோதனன் சொா்க்கம் அடையும் நிகழ்வு
குப்பத்தாமோட்டூா் கிராமத்தில் கடந்த 18 நாள்களாக நடைபெற்று வந்த மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சியின் நிறைவாக துரியோதனம் சொா்க்கம் அடையும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காட்பாடி வட்டம், அம்முண்டி அருகே குப்பத்தா மோட்டூா் பகுதியில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீதிரௌபதியம்மன் சமேத தருமராஜா திருக்கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் கோடைகாலத்தில் உறவையும், நட்பையும் பலப்படுத்தும் விதமாக அக்னி வசந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 17-ஆம் ஆண்டு அக்னி வசந்த விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த 18 நாள்களாக மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வந்தது.
Advertisement
நாடகக் கலைஞா்கள் பங்கேற்று மகாபாரத இதிகாசத்தை தத்ரூபமாக விளக்கி நடித்துக் காட்டினா். இதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் சொா்க்கம் அடையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைக் காண வேலூா், சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்தனா். தொடா்ந்து அவா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.