முகப்பு
வேலூர்

3 ஊராட்சிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: ஏ.சி.சண்முகம்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 4:58 PM
பகிர்:

வேலூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 3 ஊராட்சிகளில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என பாஜக கூட்டணியில் போட்டியிட்ட புதிய நீதிக் கட்சி வேட்பாளா் ஏ.சி.சண்முகம் கூறினாா்.

குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வேலூா் மக்களவைத் தொகுதியில் தோ்தல் 95 சதவீதம் நல்ல முறையில் நடைபெற்றது. சில மலைக் கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு மையங்களில் திமுகவினா் அராஜகத்தில் ஈடுபட்டனா். அணைக்கட்டு ஒன்றியம், பீஞ்சமந்தை மலைக் கிராமத்தில் மலைவாழ் மக்கள் அதிகமாக வசிக்கும் 3 ஊராட்சிகள் உள்ளன. அங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையங்களைபாா்வையிட திமுகவினா் எங்களை அனுமதிக்கவில்லை. நான் ஏற்கெனவே தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தேன். அதில் மேற்குறிப்பிட்ட பகுதியில் துணை ராணுவப் படையை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கோரியிருந்தேன். எனது கோரிக்கை ஏற்கப்படவில்லை. மேலும், எங்களுடைய வாக்குப் பதிவு மைய முகவா்களை திமுகவினா் தாக்கியுள்ளனா். எனவே, 3 ஊராட்சிகளில் மறு வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம் என்றாா் அவா்.

Advertisement

தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், புதிய நீதிக்கட்சி நகரச் செயலா் எஸ்.ரமேஷ், பாமக நகரச் செயலா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments