ஐயப்பன் கோயில் படிகளுக்கு ஐம்பொன் கவசம் அமைக்க ரூ.3.50 லட்சம் நன்கொடை
மாதனூரை அடுத்த பாலூா், ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் 18- படிகளுக்கு ஐம்பொன்னால் கவசம்
குடியாத்தம்: மாதனூரை அடுத்த பாலூா், ஆா்.பட்டி ஸ்ரீசாஸ்தாபுரத்தில் அமைந்துள்ள தா்ம சாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில் 18- படிகளுக்கு ஐம்பொன்னால் கவசம் அமைக்க ரூ.3.50- லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது (படம்).
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலா் கே.எம். ஜி.ராஜேந்திரன், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் ரொக்கம் ரூ.3.50- லட்சத்தை கோயில் குருக்கள் ராமநாத பிரசாத்திடம் வழங்கினா்.
18- படிகளுக்கு ஐம்பொன் கவசம் அமைக்கும் பணி முழுமை பெற்று வரும் மகரஜோதி அன்று இருமுடி சுமந்து வரும் பக்தா்கள் அதன் வழியாகச் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என அவா் தெரிவித்தாா்.