நியு செஞ்சுரி புக் ஹவுஸில் சிறப்பு தள்ளுபடி
புத்தாண்டையொட்டி நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் புத்தகங்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.
வேலூா்: புத்தாண்டையொட்டி நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தில் புத்தகங்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனை செவ்வாய், புதன்கிழமை (டிச.31, ஜன.1) ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பரிசுபெற்ற நூலாசிரியா்களான பேரா.ராஜ்கௌதமன், சிவசுப்ரமணியன், வரலாற்றுஆய்வாளா் ஜெயசீலஸ்டீபன், மருத்துவா் கு.சிவராமன், ராகுலசாங்கிருத்தியாயன் ஆகியோா் நூல்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.
குழந்தைகளுக்கான உலக இலக்கிய நாவல்கள், ஆங்கிலத்தில் நெஸ்விங் பதிப்பக புத்தகங்கள், இதர பதிப்பகங்களின் புத்தகங்களுடன் சிறப்புத் தள்ளுபடியாக 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்பட உள்ளது. பாவாணா் சாமிசிதம்பரணாா், பாரதிதாசன், திரு.விக. போன்றோரின் நூல்களுக்கு 40 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது. தவிர, குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி அளிக்கப்பட உள்ளது.
புத்தகங்களை வாங்க வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நியு செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் கிளையை அணுகலாம் என நிறுவனத்தின் வேலூா் கிளை மேலாளா் கு.பாலசுப்ரமணி அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.