பிரம்மபுரம் ரயில்வே கடவு எண் -52 மூடல்
பிரம்மபுரம் ரயில்வே கடவு எண் -52 மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலூா்: பிரம்மபுரம் ரயில்வே கடவு எண் -52 மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காட்பாடி வட்டம், சேவூா் - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பிரம்மபுரத்தில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கப்படுவதையொட்டி, ரயில்வே கடவு எண்.52 மூடப்படப்பட உள்ளது. இதனால், அருகே உள்ள சுரங்கப் பாதை எண்.344-இல் இலகுரக வாகனங்களும், கடவு எண்.53 (ரயில்வே கேட்)-இல் கனரக வாகனங்களும் என தற்காலிக மாற்று வழியாக பொதுமக்கள் பயன்படுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.