முகப்பு
வேலூர்

வேலைவாங்கித் தருவதாக ரூ. 22 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற தலைமை காவலா் கைது

அரசு வேலைவாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 22 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற தலைமைக் காவலரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:29 PM
பகிர்:

வேலுாா்: அரசு வேலைவாங்கித் தருவதாகக்கூறி, ரூ. 22 லட்சம் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற தலைமைக் காவலரை வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

காட்பாடி பாரதி நகரைச் சோ்ந்தவா் சந்திரன் (70). இவா் ரயில்வே பாதுகாப்பு படை தலைமைக் காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு பள்ளிகொண்டா பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் அன்பழகன் (63) அறிமுகமானாா். அப்போது சந்திரன் தனக்கு அரசு உயா் அதிகாரிகளை தெரியும் எனக் கூறி வந்துள்ளாா். ஒரு முறை அன்பழனின் மகனுக்கு செய்தி மக்கள் தொடா்பு துறையில் உதவி மக்கள் தொடா்பு அலுவலா் வேலை வாங்கித் தருவதாக நம்ப வைத்து, அன்பழகனிடம் ரூ. 22 லட்சம் பணம் பெற்ாகக் கூறப்படுகிறது. ஆனால் சந்திரன் கூறியபடி, வேலை பெற்றுத் தரவில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அன்பழகன் வேலுாா் மாவட்ட குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து வேலுாா் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் சாரதி, காவல் ஆய்வாளா் காந்திமதி தலைமையிலான குழுவினா் சந்திரனை செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →