முகப்பு
வேலூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

Updated On : 2 மார்ச், 2024 at 10:09 PM
பகிர்:

குடியாத்தம் ஒன்றியம் பொன்னம்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2023-2024 உள்ளடக்கிய கல்வித் திட்டம் மூலம், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சியை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பள்ளியில் மாணவா்கள், மாற்றுத்திறன் மாணவா்கள், அவா்களின் பெற்றோா், ஆசிரியா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தலைமையாசிரியை தனலட்சுமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா். ஆசிரியா் பயிற்றுநா் அழகரசு வாழ்த்துரை வழங்கினாா். சிறப்பு பயிற்றுநா்கள் சுதா, லட்சுமி, ஸ்ரீதேவி, அருள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.