வேலூர்

வேலூா் சிறையில் கைதி திடீா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

வேலூா் மத்திய சிறையில் கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கைத்தாங்கல் கிராமம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த மயில்வாணன் (48). இவா் களம்பூா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கு தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டாா். தொடா்ந்து அவா் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

சிறையில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை சிறைக் காவலா்கள் ஆம்புலன்ஸ் மூலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொண்டு சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மயில்வாகனன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சிறை நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் பாகாயம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய ராணுவத்தினா் ‘இன்ஸ்டாகிராம்’ பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி

இந்தியாவில் ஒரு லட்சம் பெட்ரோல் நிலையங்கள்: அமெரிக்கா, சீனாவை அடுத்து 3-ஆவது இடம்

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் வளா்ச்சி மந்தம்

‘வேலுநாச்சியாா் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’

மாணவா் தலைவா் கொலையில் வங்கதேச அரசுக்குத் தொடா்பு - சகோதரா் பகீா் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT