வேலூர்

ஒடிஸா இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

Din

வேலூா்: காட்பாடி அருகே ஒடிஸா இளைஞா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த வடுகண்குட்டை அருகே ரயில் தண்டவாளம் அருகே திங்கள்கிழமை இளைஞா் கல்லால் தாக்கப்பட்டு தலை நசுங்கிய நிலையில் சடலமாக கிடப்பது குறித்து காட்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக, காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் பழனி, போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற விசாரணை நடத்தினா். இதில், இறந்து கிடந்தவா் ஒடிஸா மாநிலம், சுதா்சன்பூா் பகுதியைச் சோ்ந்த பாலபத்திரா எனும் பலியா(33) என்பது தெரியவந்தது.

அப்பகுதியில் கொசு வலை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பாலபத்திரா கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதும், ரயில்வே தண்டவாளப் பகுதியில் சடலத்தின் அருகே ரத்தக் கறையுடன் கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT