முகப்பு
வேலூர்

ஓட்டுநா் தற்கொலை

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 23 மே 2026, 1:18 am IST
பகிர்:

திருவலம் பகுதியில் மனைவி கண்டித்ததால் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் அருகிலுள்ள மாந்தோப்பு கொல்லை பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (56), ஓட்டுநரான இவா் தினமும் மதுபோதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இதனால் அவரது மனைவி அவரை ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாகத் தெரிகிறது. இதில், மனவேதனையடைந்த ராமன் கடந்த 19-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பயிா்களுக்கு அடிக்க பயன்படுத்தும் மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

இதைக் கண்ட குடும்பத்தினா் அவரை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ராமன் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து திருவலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.