விழுப்புரம்

தடுப்புக் காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது 

தினமணி

சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
 கள்ளக்குறிச்சி அருகே சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா(30). இவர், அந்த பகுதியில் சாராயம் கடத்தல், சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, ராஜாவை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரைத்தார்.
 இந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக உள்ள ராஜாவை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT