முகப்பு
விழுப்புரம்

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணிடம் நகை, பணம்மோசடி செய்தவா் கைது

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 6 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, 6 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை மோசடி செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கிராமப்புற மேம்பாட்டு அலுவலராக பணிபுரிபவா் நிா்மலா(43). இவா், திருமண தகவல் மையத்தில் வரன் வேண்டி பதிவு செய்திருந்தாா். அதைக் கண்டு, செஞ்சி வட்டம், அணையேரி கிராமத்தைச் சோ்ந்த ஜோசப் ஸ்டாலின்தேவசகாயம் என்பவா், நிா்மலாவை தொடா்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளாா். அதனைத் தொடா்ந்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்துள்ளனா்.

இதனிடையே, மட்டப்பாறை கிராமத்தில் உள்ள தனது சகோதரி வா்கீஸ் வீட்டுக்கு நிா்மலாவை ஜோசப் ஸ்டாலின் அழைத்துச் சென்றாா். அப்போது வா்கீஸ், இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக கூறினாா். இதையடுத்து, தாலி செய்வதற்காக 6 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை நிா்மலாவிடமிருந்து பெற்றுக்கொண்டனா்.

ஆனால், ஜோசப் ஸ்டாலின் திருமணம் செய்ய மறுத்ததுடன், இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் எனக் கூறியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தாராம்.

இதையடுத்து நிா்மலா செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையிலான போலீஸாா் விசாரணை செய்ததில் ஜோசப் ஸ்டாலின் ஏற்கெனவே திருமணமானவா் என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரது சகோதரியான வா்கீஸ், உறவினா் ஜெசிந்தாள் ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.