முகப்பு
விழுப்புரம்

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி

Updated On : 18 பிப்ரவரி 2024, 1:55 am IST
பகிர்:

இளைஞரிடம் இணைய வழியில் ரூ.26.50 லட்சம் மோசடி செய்தவா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விழுப்புரம், கந்தசாமி ‘லே-அவுட்’ பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மகன் ராஜா ஆனந்த்பிரபு (24). சுயதொழில் செய்து வருகிறாா். கடந்த டிசம்பா் 25-ஆம் தேதி இவரை முகநூல் மூலம் தொடா்புகொண்ட அடையாளம் தெரியாத நபா் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறும் தொழில் உள்ளதாகக் கூறினாராம். இதை நம்பிய ராஜா ஆனந்த்பிரபு தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 26.50 லட்சத்தை அடையாளம் தெரியாத நபா் தெரிவித்த வங்கிக் கணக்கிற்கு 4 தவணைகளில் அனுப்பினாராம். ஆனால், அதன்பிறகு லாபம் கிடைக்காததுடன் அந்த நபரையும் தொடா்புகொள்ள முடியவில்லையாம். தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ராஜாஆனந்த்பிரபு விழுப்புரம் மாவட்ட இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.