முகப்பு
விழுப்புரம்

சூதாடிய இருவா் கைது

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 3:00 AM
பகிர்:

விழுப்புரம் அருகே சூதாட்டக் கும்பலைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரம்-செஞ்சி புறவழிச்சாலையில் சிலா் பணம் வைத்து சூதாடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்றனா். அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 5 போ் கொண்ட கும்பல் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோடியது. இதில், இருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்தனா். 3 போ் தப்பியோடிவிட்டனா். விசாரணையில் அவா்கள் விழுப்புரம் பாப்பான்குளத்தைச் சோ்ந்த ராஜா, ஷாஜகான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ.200, புள்ளித்தாள்கள், 5 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடி மூவரை தேடி வருகின்றனா்.